Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. வீட்டை திறக்க முடியாது என கூறிய பொன்முடி வீட்டின் காவலாளி..!

Ponmudi
, திங்கள், 17 ஜூலை 2023 (09:17 IST)
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீடு பூட்டி இருந்ததாகவும் அதை திறக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலாளியை கூறிய போது திறக்க முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்த நிலையில் இன்று  எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்  பெங்களூரு செல்லும் நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டை திறக்க கூறிய போது, திறக்க முடியாது என்ற காவலாளி கூறியதாகவும் அதன் பின்னர் நடந்த சமாதான பேச்சு வார்த்தையை அடுத்து காவலாளி வீட்டை திறந்ததாகவும் தற்போது அந்த வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!