Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் அறிவிப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

மின் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் அறிவிப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (07:15 IST)
மின்வாரிய ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அடுத்து பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சமீபத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து மின் ஊழியர்கள் பேரணி மற்றும் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 
 
டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபின் ராவத் மறைவு: மூன்று நாள் துக்கம் என முதல்வர் அறிவிப்பு!