Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

Siva
புதன், 1 ஜனவரி 2025 (17:58 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல் அறியாகி உள்ளன.
 
இதுகுறித்து தாசில்தார், வருவாய் துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்த நிலையில் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் நில அதிர்வு குறித்து கிராம மக்களிடம் தகவல் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
நில நடுக்கம் உணரப்பட்ட கிராமத்தில் பொதுமக்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதாகவும், தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவினாலும், இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments