Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ - பாஸ் ரத்து செய்யப்படாது: ஈபிஎஸ் திட்டவட்டம்!!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (16:51 IST)
இ-பாஸ் முறையை ரத்து செய்ய வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஈ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா பாதிப்பு குறைந்தபின் பொது போக்குவரத்தை இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே இப்போதைய நேரத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments