Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது இ பாஸ் இல்ல… ஆல் பாஸ் – இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (09:37 IST)
தமிழகத்தில் இ பாஸ் சம்மந்தமாக பல்வேறு விவாதங்கள் நடந்துவரும் நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்நிலையில் இ-பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்டு 17 முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும். இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு எண், ரேசன் கார்டு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைத்தால் உடனடி இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பு இணையத்தில் கேலி செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் கிடைக்கும் என்றால் எதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் பலரோ இ பாஸ் மூலமாக தனியார் ஏஜென்ஸிகள் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் சம்பாதிக்கவே இன்னமும் இ பாஸ் நடைமுறை நீக்கப்படாமல் உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வரின் அறிவிப்பை கேலி செய்யும் விதமாக பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments