ஓபிஎஸ் பதுக்குவது.. பாய்வதற்காகவா? – துரைமுருகன் சந்தேகம்!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (15:09 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிக்கலா விடுதலை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் சசிக்கலா விடுதலை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிக்கலா விடுதலையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து ஏதும் பேசாதததும் அரசியல் வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள திமுக பொது செயலாளர் துரைமுருகன் “எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஒபிஎஸ்ஸிடம் ஏதோ திட்டம் இருக்கிறது. யார் தலைவர் என்பதே குழப்பமாக இருப்பதால் தேர்தல் வரும் வரை அதிமுக இருக்குமா என்பதே தெரியவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!

நேபாளத்தில் பாரம்பரிய கட்சிகள் படுதோல்வி.. GenZ ஆதரவு பெற்ற பாடகர் கட்சி அபார வெற்றி..!

சென்னை எழும்பூர் பார்க்கிங் மூடப்படும்.. மாற்று ஏற்பாடு செய்து கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

எங்களை விட தேமுதிகவுக்கு அதிகமா?!.. கோபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments