Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆட்சியை கவிழ்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய வேலையே கிடையாது: துரைமுருகன்

ஆட்சியை கவிழ்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய வேலையே கிடையாது: துரைமுருகன்
, ஞாயிறு, 25 மார்ச் 2018 (15:06 IST)
திமுக மண்டல மாநாடு நேற்றும் இன்றும் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய இரண்டாவது நாளில் திமுக தொண்டர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. இன்று காலை 9மணிக்கு இந்த மாநாடு தொடங்கிய நிலையில் இன்று பல்வேறு தலைப்புகளில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர். நத வகையில் இந்த மண்டல மாநாட்டில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தமிழக ஆட்சியை கலைப்பது குறித்து ஆவேசமாக பேசியதாவது:

அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்கு கடினமான வேலை கிடையாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடையும் என முன்கூட்டியே எங்கள் தலைவர் கருணாநிதி கூறியிருந்தார் .  ஜெயலலிதா-ஜானகி இருந்த போதே அந்த விவகாரத்தில் தலையிட மறுத்தவர் தலைவர் கருணாநிதி.
அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்கு கடினமான வேலை கிடையாது.  எதிர்க்கட்சி என்பது எதிர்த்துப் பேசுவது மட்டுமல்ல, தேவைப்பட்டால் ஆலோசனை வழங்குவதற்கும் தான்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார். சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறும் இந்த மாநாடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தஞ்சாவூரில் தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்