Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு: மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (12:34 IST)
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார் என்பதும் அங்கு அவர் மேகதாது அணை மற்றும் மார்கண்டேய அணை பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த போகிறார் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன்னர் டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் மேகதாது அணை, மார்க்கண்டேய அணை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
மேலும் மேகதாது அணை கட்டுவதை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தும்படி மத்திய அமைச்சர் ஷெகாத்திடம் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடக அரசு தமிழக அரசுக்கு வர வேண்டிய நீரை சரியாக தருவதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சருடனான தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கலின் இந்த சந்திப்பு முக்கியத்துவமானது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments