Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”முதல்வருக்கு தமிழ் புரியவில்லை..இங்கிலிஷ்லேயே பதில் சொல்வோம்”…துரை முருகன்

Arun Prasath
வெள்ளி, 6 மார்ச் 2020 (12:25 IST)
திமுக பொருளாளர் துரை முருகன் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதல்வருக்கு தமிழில் சொல்லியும் புரியவில்லை, இனி ஆங்கிலத்தில் பதில் அளிப்போம்” என கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் துரை முருகன் மற்றும் எம்.எல்.ஏ. நந்தகுமார் வேலூர் மாவட்டம் கலெக்டர் சண்முக சுந்தரத்தை சந்தித்து, குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து தர வேண்டும் என மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை முருகனிடம், குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் திமுகவிடம் கேள்வி எழுப்பினாரே? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த துரை முருகன், “சிஏஏ குறித்து முதல்வருக்கு தமிழில் பதிலளித்தோம். ஆனால் அவருக்கு புரியவில்லை. இனி முதல்வரின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்போம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments