Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது அணியில் திமுக இடம் பெறுகிறதா?- துரை முருகன் பேட்டி

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (12:53 IST)
மூன்றாவது அணியில் திமுக இடம்பெறாது என துரைமுருகன் சூசகமாக தெரிவித்தார்.

 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து, பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.  இது தொடர்பாக சந்திரசேகர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.
 
இதனால், காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், காங்கிரஸுடனான கூட்டணியை திமுக முறித்துக்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஒருபக்கம், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். எனவே, புதிதாக ஒரு அணி உருவாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், 3வது அணியில் திமுக இடம் பெறாது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தே திமுக தேர்தலில் போட்டியிடும் என கூறினார். துரைமுருகனின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தரப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments