Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏண்டா இங்க குடிக்கிறீங்கன்னு கேட்ட காவலர் அடித்துக் கொலை

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (12:21 IST)
சென்னையில் காவலர் ஒருவர் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த  ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் வேலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். 
 
இந்நிலையில் நேற்று பணி முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பிய போது, பள்ளி வாகனத்தில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனால் மோகன்ராஜ் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த் அந்த போதை ஆசாமிகள், காவலரை மதுபாட்டில்களால் தலையில் தாக்கியுள்ளனர். மேலும் பாட்டிலை உடைத்து அவரது கழுத்தில் குத்தியுள்ளனர்.
 
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலே பலியானார். அவரை அந்த போதை ஆசாமிகள் ரோட்டில் வீசிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோகன்ராஜை கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொல்லப்பட்ட மோகன்ராஜுக்கு அன்பு ரோஜா என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும், அவினாசி, அஜயா என்ற மகள்களும் உள்ளனர். மோகன்ராஜ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments