Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு: தொண்டர்கள் மகிழ்ச்சி!

துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு: தொண்டர்கள் மகிழ்ச்சி!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (17:22 IST)
திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வரும் 9ஆம் தேதி பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் இந்த பதவிக்கு போட்டியிடுவோர் இன்று விண்ணப்பிக்கலாம் எனவும் திமுக தலைமை அறிவித்து இருந்தது தெரிந்ததே
 
இதனையடுத்து இன்று காலை திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் சார்பிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு சார்பிலும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். திமுக பொருளாளர் பதவிக்கு எ.வல்.வேலு, கனிமொழி, ஆ ராசா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டபோதிலும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் முடிவடைந்ததால் துரைமுருகன் தவிர வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கும், டி.ஆர்.பாலு தவிர வேறு யாரும் பொருளாளர் பதவிக்கும் விண்ணப்பிக்கவில்லை. 
 
எனவே துரமுருகன் திமுக பொதுச்செயலாளராகவும், டி.ஆர்.பாலு திமுக பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"கோரக்பூர் குழந்தைகள் இறப்பை அம்பலப்படுத்தியதால் சிறையில் சித்ரவதை" - கஃபீல் கான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்