Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
, திங்கள், 12 டிசம்பர் 2016 (20:45 IST)
வர்தா புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 

 
வர்தா புயல் இன்று மாலை கரையை கடந்தது. இதனால் காலை முதல் பலத்த மழை பெய்தது. அதோடு சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
 
சென்னையில் அதிகபட்சமாக 192 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வர்தா புயலால் சென்னை உள்ள சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
 
தற்போது போர்கால அடிப்படையில் சாலையில் உள்ள மரங்கள் மற்றும் விழுந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இரவு 9 மணிக்குள் சென்னை நகர் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆக்கிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000 மரங்கள் ; 3000 மின் கம்பங்கள் - ருத்ர தாண்டபம் ஆடிய வர்தா புயல்