Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பாதிப்பால் காய்கறி விலை கடும் உயர்வு! – சென்னை மார்க்கெட் நிலவரம்!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (09:55 IST)
சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து விலையும் அதிகரித்துள்ளது.



சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகல் மழை வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் நிலவரப்படி சில காய்கறிகளின் விலை ரூ.30 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.20க்கு விற்று வந்த கத்தரிக்காய் தற்போது ரூ.50க்கும், ரூ.15க்கு விற்று வந்த வெண்டைக்காய் ரூ.50க்கும் விற்பனையாகி வருகிறது. காய்கறி வரத்து குறைவாக உள்ளதால் இந்த விலையேற்றம் அடுத்த 2 வாரங்களுக்கு தொடரலாம் என கூறப்படுகிறது. இந்த விலையேற்றம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments