Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற விவகாரம்: இனி உள்ளே நுழைய புதிய விதிமுறைகள்!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (09:35 IST)
நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் உள்ளே குதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நாடாளுமன்ற நுழைவுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.



நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை கூட்டம் நடந்து வந்த நிலையில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இருவர் அவைக்குள் குதித்து புகை பொருளை வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இனி நாடாளுமன்றத்திற்குள் செல்ல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, முதன்மை பிரதான வாயில் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே செல்ல வேண்டும். ஊடகவியலாளர்கள், பணியாளர்கள் தனி வாயில் வழியே உள்ளே அனுமதிக்கப்படுவர். நான்காவது வாயில் வழியாக இதுவரை அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு அவ்வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் உள்ளது போன்ற அதிநவீன உடல் ஸ்கேனிங் இயந்திரத்தை நாடாளுமன்றத்தில் அமைக்கவும், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதிக்க முடியாத வண்ணம் கண்ணாடி சுவர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments