Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு....

J.Durai
புதன், 16 அக்டோபர் 2024 (09:22 IST)
திருவள்ளூர் மாவட்டம்  செங்குன்றம், சோழவரம், சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு தொடங்கி 3வது நாளாக மழை நீடித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் சோழவரம் 30செமீ, செங்குன்றம் 28செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 277 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3471 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2326 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 16.57 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.
 
புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
 
தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர் இருப்பு உயர தொடங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments