Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 நாட்களுக்கு முக்கிய ரயில்கள் ரத்து! தென்னக ரயில்வே அறிவிப்பு..!

Train

Siva

, செவ்வாய், 16 ஜூலை 2024 (12:48 IST)
ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக 10 நாட்களுக்கு  முக்கிய ரயில்கள் ரத்து! என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. எனவே தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில்  (20691)  ஜூலை 23 முதல் ஜூலை 31 வரையும், நாகர்கோவில்  - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை ரத்து செய்யப்படுகிறது
 
அதேபோல் ஜூலை 21 அன்று மாலை 3 மணிக்கு பிகானிரிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (22632) சென்னை எழும்பூர் வழியாக வருவதற்கு பதிலாக அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகள் பெரம்பூரில் இறங்கி கொள்ளலாம்.
 
ஜூலை 24 மற்றும் 31 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய பனாரஸ் விரைவு ரயில் (22535) ஜூலை 28 அன்று மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய அயோத்தியா கண்ட்டோன்மெண்ட் ஷிரத்தா சேது விரைவு ரயில் ( 22613) ஆகியவை சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இயக்கப்படும். 
 
ஜூலை 23 முதல் 31ம் தேதி வரை காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில்(12606) மற்றும் அதன் இணை ரயிலான சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
 
ஜூலை 22, 24, 27, 28, 29, 31 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (20684) ஜூலை 24, 25, 28, 30 ஆகிய நாட்களில் தாமரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் ( 20683) விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.
 
ஜூலை 24, 28, 29, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் (22657) சென்னை எழும்பூரில் இருந்தும், ஜூலை 22, 23, 25, 29, 30 ஆகிய நாட்களில் மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (22658) சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும்
 
இவ்வாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10வது தேர்ச்சி போதும்..! தபால்துறையில் 44,228 பணியிடங்கள்! - உடனே அப்ளை பண்ணுங்க!