Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனமழை எதிரொலி: நாளை பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு

rain
, புதன், 2 நவம்பர் 2022 (21:30 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் புதுவை மற்றும் தென் மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
கடந்த திங்கள்கிழமை முதல் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக இன்று மட்டும் 6 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கனமழை தொடர்ந்து வருவதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை அரசு இந்த விடுமுறையை அறிவித்துள்ளது என்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்றும் புதுவை அரசு அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு நாளை காலை வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய தாலிபான்கள்