Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 26 மே 2024 (08:12 IST)
வங்க கடலில் 'ரீமால்' புயல் தோன்றியுள்ளதை அடுத்து தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பது அதன் பின்னர் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி வடகிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தகவல் வழியாக உள்ளன.

சென்னையை பொருத்தவரை வானம் சில பகுதிகளில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு.. எத்தனை பேர் போட்டி?

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு..! குடிநீர், மின்சாரம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு..!!

11 வயது சிறுவனை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்.. நாயின் உரிமையாளர் மீது புகார்..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்திவைப்பு..! டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!!

மௌனம் கலைத்த நடிகர் சூர்யா..! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவுக்கு கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments