வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 26 மே 2024 (08:12 IST)
வங்க கடலில் 'ரீமால்' புயல் தோன்றியுள்ளதை அடுத்து தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பது அதன் பின்னர் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி வடகிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தகவல் வழியாக உள்ளன.

சென்னையை பொருத்தவரை வானம் சில பகுதிகளில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments