Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

Siva
ஞாயிறு, 26 மே 2024 (08:05 IST)
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 நாட்களுக்கு பின் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 
 
மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி,  சிற்றருவியில் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என்றும், மெயின் அருவியில் ஆண்கள் பகுதி நடைபாதையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் பெண்கள் பகுதி வழியாக தடுப்பு அமைத்து ஆண்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதுமட்டுமின்றி மெயின் அருவி பகுதியில் மராமத்து பணிகள் நடந்ததால் கடந்த சில நாட்களாகவே மெயின் அருவிகளும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 
 
தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதை அடுத்து மெயின் அருவியில் செய்து கொண்டிருந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்தும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்