ஃபேஸ்புக் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமான டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி, தனது அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொண்ட பேட்டி காணொளி.
டப்ஸ்மேஷ் செய்து அனைவரையும் கவர்ந்த மிருணாளினி, இரண்டே மாதத்தில் பிரபலமாகியுள்ளார். தற்போது அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஃபேஸ்புக்கில் தற்போது தனது டப்ஸ்மேஷ் வீடியோ பதிவேற்றம் செய்ய தனி பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அழகான முகபாவனை மூலம் டப்ஸ்மேஷ் செய்து ஃபேஸ்புக்கில் மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர். டப்ஸ்மேஷ் எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தாலும். அதை ரசிப்பதற்கென்று தனி கூட்டமே உள்ளது. இப்படி ஃபேஸ்புக்கில் தனது டப்ஸ்மேஷ் வீடியோவில் பதிவிட்டு மிருணாளினி, தனது அழகான முகபாவனை மூலம் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.
மேலும் ரசிகர் கூட்டம் அதிகமான காரணத்தினால் ஃபேஸ்புக்கில், டப்ஸ்மேஷ் வீடியோ பதிவிட தனி பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அண்மையில் தெலுங்கு பிரேமம் படத்தில் இவர் மலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என்று ஃபேஸ்புக்கில் அதிக அளவில் போஸ்டுகள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.