Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (19:54 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று அதிகபட்சமாக தமிழகத்தில் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பாக சென்னையில் 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டிஎஸ்பி ஒருவருக்கும் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயது பெண் டிஎஸ்பி ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளன. பல்லாவரத்தை சேர்ந்த அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கவர்னர் மாளிகையில் பணிபுரிந்த டிஎஸ்பி ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments