Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
செவ்வாய், 21 ஜனவரி 2025 (16:31 IST)
தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வட தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜனவரி 23ஆம் தேதி தென் தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் 24 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகம் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் நாளை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது.. என்ன காரணம்?

நாளை முதல் 4 நாட்களுக்கு அரசியல் தான்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யும் விஜய்,..!

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? மறுவிசாரணை தேவை! - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments