Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலகும் வடகிழக்கு பருவமழை... இனி வறண்ட வானிலையே..!!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (14:01 IST)
வரும் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
 
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.     
 
இதனால் வரும் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments