Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதைப் பொருள் கடத்தல் வழக்கு; ஜாபர் சாதிக்கிற்கு என்.பி.சி காவல்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு; ஜாபர் சாதிக்கிற்கு என்.பி.சி காவல்!

Sinoj

, சனி, 9 மார்ச் 2024 (22:15 IST)
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலயா  ஹவுஸ் நீதிமன்றம் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி அளித்தது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படுபவரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்தனர்.
 
இந்த நியையில், இன்று அவரை கைது செய்த போலீஸார் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டனர்.
 
இந்த வழக்கில் அடுத்த என்ன நடக்கும் என கேள்வி எழுந்த நிலையில்,  போதைப் பொருள் வழக்கில் கைதான சாதிக்கை டெல்லி பாட்டியாலயா  நீதிமன்றத்தில் போதைப் பொருள்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
 
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலயா  ஹவுஸ் நீதிமன்றம் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி அளித்தது.
 
எனவே ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த விசாரணையின்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!