Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் விவகாரம்.! தமிழக ஆளுநருடன் எடப்பாடி இன்று சந்திப்பு.!!

Senthil Velan
ஞாயிறு, 10 மார்ச் 2024 (09:58 IST)
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,   தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவாகரத்தில் முக்கிய புள்ளியாக இருந்தது தெரிய வந்ததை அடுத்து, திமுகவில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
இதனிடையே தமிழ்நாட்டில் போதை பொருள் விவகாரத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகள் ஈடுபடுவதாக கூறி, அண்மையில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது என்றும்  தமிழகத்தை சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தி கைதாகி உள்ளது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே தலைகுனிவு தான் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

ALSO READ: சென்னை அழைத்து வரப்படுகிறார் ஜாபர் சாதிக்.. சிக்க போகும் பிரபலங்கள் யார் யார்?
 
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  திமுக ஆட்சியில் போதைப் பொருள் அதிகரித்து வருவது தொடர்பாக ஆளுநரிடம் எடப்பாடி மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments