மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி.. சந்திரபாபு, பவன் கல்யாண் கட்சிகள் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 10 மார்ச் 2024 (07:58 IST)
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற போவதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாண் கட்சியான  ஜனசேனா ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட இந்த இரு கட்சிகள் தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவருடைய கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments