Publish Date: Sat, 19 Mar 2022 (17:07 IST)
Updated Date: Sat, 19 Mar 2022 (17:09 IST)
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு அமைத்துக் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போதை மாத்திரிக்கைகளை வட மா நிலங்களில் இருந்து, கூரியல் மூலம் கடத்தி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
கல்லூரி மாணவர்களுக்கு இந்தக் கும்பல் வலி நிவாரண மாத்திரைகளையும் போதை மாத்திரைகளை விற்பதாகவும், இதை விற்க, வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் இந்தப் போதை மாத்திரை விற்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் ஒரு பட்டதாரிப் பெணும் கைது செய்யப்பட்டுள்ளார்.