Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

Mahendran
திங்கள், 19 மே 2025 (11:40 IST)
சென்னையில் விரைவில் குடிநீர் ஏ.டி.எம்-க்கள் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கிகளில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்-க்களில் பணம் வருவது போன்று, குடிநீர் ஏ.டி.எம்-க்களில் காசு போட்டால் வாட்டர் பாட்டில்கள் வரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் ஏ.டி.எம்-க்கள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், முதல் கட்டமாக 50 குடிநீர் ஏ.டி.எம்-க்கள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் விரைவில் தொடங்கி வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதில், 150 மில்லி,   மற்றும் ஒரு லிட்டர் என 2 வகைகளில் குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வாட்டர் பாட்டில்களை கொண்டு வந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளும் வகையிலும் இந்த ஏ.டி.எம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த குடிநீர் ஏ.டி.எம்-க்கள் திட்டம் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்-க்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments