Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்ன பன்றது: அதிர்ச்சியில் குடிகாரர்கள் சங்கம்!

கோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்ன பன்றது: அதிர்ச்சியில் குடிகாரர்கள் சங்கம்!

கோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்ன பன்றது: அதிர்ச்சியில் குடிகாரர்கள் சங்கம்!
, சனி, 28 ஜனவரி 2017 (17:21 IST)
தமிழகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படாது எனவும் அதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை அறிவித்தது.


 
 
இது தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1-ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். மேலும் உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.
 
இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைவரும் இதனை மனமார பாராட்டுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
கோக், பெப்சி விற்பனையை ஜூன் வரை வணிகர்கள் நிறுத்தக் கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்கள் அறிவித்துள்ள கோக், பெப்சி விற்பனை நிறுத்தம் செய்தி தங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

webdunia

 
 
டாஸ்மாக் மதுபானகளில் நாங்கள் கோக், பெப்சியை கலந்து குடிப்பதால் மன நிறைவு ஏற்படுகிறது. ஆனால் திடீரென கோக், பெப்சியை நிறுத்துவதால் எங்களுக்கு மன நிலை பாதிக்கப்படும் என கூறியுள்ளனர். இதனால் ஜூன் வரை அதனை நிறுத்தக்கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீ கடைக்கும், இட்லி கடைக்கும் சண்டை: கொதிக்கும் எண்ணெயால் காயமடைந்த வாடிக்கையாளர்கள்!