Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவரை மட்டும் நம்பிவிடாதீர்கள்: கருணாநிதி கூறிய அந்த நபர் யார்? ராம்தாஸ் டுவிட்

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (11:24 IST)
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராம்தாஸ் அவர்கள் இன்று தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டுவீட் இதுதான்:
 
திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
 
இந்த டுவீட்டில் உள்ள அந்த நபர் யார் என நெட்டிசன்கள் தங்கள் எண்ணக்குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர். ஒருசிலர் வைகோ என்றும், ஒருசிலர் ஸ்டாலின் என்றும், ஒருசிலர் வீரமணி என்றும் இன்னும் சிலரோ அது ராம்தாஸ் என்றும் கூறி வருகின்றனர். உண்மையில் கருணாநிதி கூறியது யாரை என்பது டாக்டர் ராமதாஸ் அவர்களே கூறினால் தான் இந்த புதிருக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments