Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவரை மட்டும் நம்பிவிடாதீர்கள்: கருணாநிதி கூறிய அந்த நபர் யார்? ராம்தாஸ் டுவிட்

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (11:24 IST)
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராம்தாஸ் அவர்கள் இன்று தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டுவீட் இதுதான்:
 
திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
 
இந்த டுவீட்டில் உள்ள அந்த நபர் யார் என நெட்டிசன்கள் தங்கள் எண்ணக்குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர். ஒருசிலர் வைகோ என்றும், ஒருசிலர் ஸ்டாலின் என்றும், ஒருசிலர் வீரமணி என்றும் இன்னும் சிலரோ அது ராம்தாஸ் என்றும் கூறி வருகின்றனர். உண்மையில் கருணாநிதி கூறியது யாரை என்பது டாக்டர் ராமதாஸ் அவர்களே கூறினால் தான் இந்த புதிருக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments