Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10% இட ஒதுக்கீடு மிகப்பெரிய சமூக அநீதி: டாக்டர் ராம்தாஸ்

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (09:04 IST)
பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துவிட்ட நிலையில் இன்று அல்லது நாளை இதுகுறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தேசிய அளவில் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முற்பட்ட வகுப்பு மக்களின் வாக்குகளை பெறவே இந்த இட ஒதுக்கீடு திட்டம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, 'பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் அவர்களின் இந்த கருத்துக்கு பெரும்பாலான எதிர்ப்புகளும் ஒருசில ஆதரவு கமெண்ட்டுக்களும் பதிவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments