Publish Date: Thu, 02 Dec 2021 (13:49 IST)
Updated Date: Thu, 02 Dec 2021 (13:50 IST)
அரசு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது என்று கூறிய டாக்டர் ராம்தாஸ் அரசு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்
ஏற்கனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வருவதற்கு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு திட்டங்களிலும் கை வைக்கும் நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது