Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்.. வருடம் முழுவதும் சீசன் தான்: டாக்டர் கிருஷ்ணசாமி..!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (08:48 IST)
குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன் என்றும் அந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அளவுக்கு சீசன் இருக்கும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குற்றாலத்தில் பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் இருக்கும் நிலையில் அந்த அருவிகளில் சீசன்களில் மட்டுமே தண்ணீர் வரும் என்றும் ஆனால் தான் புதிய அருவியை உருவாக்கி வருடம் முழுவதும் குற்றாலத்தில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்

இதனால் வருடம் முழுவதும் சீசன் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ள வணிகம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றாலத்தை உலகத்தரம் மிக்க சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தால் முடியாது என்றும் நான் வெற்றி பெற்று எம்.பி ஆனால் உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் இணையும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ: ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.. மிகப்பெரிய குடும்பத்தை கவர அரசியல் கட்சிகள் போட்டி..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments