Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்.. வருடம் முழுவதும் சீசன் தான்: டாக்டர் கிருஷ்ணசாமி..!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (08:48 IST)
குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன் என்றும் அந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அளவுக்கு சீசன் இருக்கும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குற்றாலத்தில் பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் இருக்கும் நிலையில் அந்த அருவிகளில் சீசன்களில் மட்டுமே தண்ணீர் வரும் என்றும் ஆனால் தான் புதிய அருவியை உருவாக்கி வருடம் முழுவதும் குற்றாலத்தில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்

இதனால் வருடம் முழுவதும் சீசன் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ள வணிகம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றாலத்தை உலகத்தரம் மிக்க சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தால் முடியாது என்றும் நான் வெற்றி பெற்று எம்.பி ஆனால் உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் இணையும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ: ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.. மிகப்பெரிய குடும்பத்தை கவர அரசியல் கட்சிகள் போட்டி..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments