இரட்டை இலை சின்னம்: கைவிரித்த உச்சநீதிமன்றம்; தினகரனின் அடுத்த மூவ் என்ன?

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (11:23 IST)
இரட்டை இலை சின்னத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம்.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி ஐகோர்ட், தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது சரியான நடவடிக்கையே என தீர்ப்பு அளித்து தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதனை எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
 
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பிற்க்கு தான் இரட்டை இலை சின்னம் எனவும் அதற்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவிட்டார். மேலும் தினகரன் குக்கர் சின்னம் ஒதுக்கோரி அளித்துள்ள மனு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்து தினகரன் ஏற்கனவே பேசுகையில் ஒருவேளை குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றால் அனைத்து தொகுதிகளிலும் சுயேட்சையாக நின்று, ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சின்னங்களில் நின்றாலும், வெற்றிபெறுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments