Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் குடிப்பவர்களை குடிகாரர் என்று சொல்லாதீர்கள்- அமைச்சர் முத்துச்சாமி

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (17:41 IST)
காலையில் குடிப்பவர்களை குடிகாரர் என்று சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை ஒண்டிப்புத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்  நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் முத்துச்சாமி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது.  டெட்ரா  பேக் திட்டம் 90 எம்.எல் திட்டம்  இன்னும் ஆய்வில்தான் இருக்கிறது. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் ''என்றார்.

மேலும், ''காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் கடையை  திறக்கும் எண்ணமே இல்லை. குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான பணிகள் செய்யும் சூழலில் உள்ளவர்களை குடிகாரர் என்று கூற வேண்டாம்…ஜாலிக்காக குடிக்கிறவர்களை அப்படி கூறுவதில் தவறில்லை ''என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments