Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூமாபட்டிக்கு யாரும் நம்பி வராதீங்க.. இது சின்ன கிராமம்! - பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்!

Advertiesment
Koomapatti

Prasanth K

, வியாழன், 26 ஜூன் 2025 (12:55 IST)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

மக்கள் பலரும் இன்ஸ்டாகிராமை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், சமீப காலமாக திடீரென சில விஷயங்கள் ட்ரெண்ட் ஆவதும், பலரும் அதை பின் தொடர்ந்து ஓடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படியாக செல்போன் டார்ச் மீது கண்ணாடி க்ளாஸை வைத்து மஞ்சள் பொடி போட்டுக் கொண்டிருந்தவர்களின் கவனம் தற்போது கூமாபட்டி பக்கம் திரும்பியுள்ளது.

 

சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல ஒரே நாளில் இந்த கூமாபட்டி பிரபலமாக காரணம் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்ஸர்கள்தான். சிலர் கூமாப்பட்டி ஏரியில் குளித்துக் கொண்டு அதை பூலோக சொர்க்கம் என வீடியோ போட்ட நிலையில் அதை பார்த்து மேலும் சிலர் அங்கு பயணம் செய்து வீடியோ போட்டதாக தெரிகிறது.

 

அதை தொடர்ந்து பலரும் கூமாபட்டியை மேப்பில் கண்டுபிடித்து பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டியானது வழக்கமான கிராமங்களை போன்ற ஒன்றுதான் என்கின்றனர் கூமாபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள். அங்கு தங்குவதற்கு பயணிகள் விடுதி போன்ற சுற்றுலா அம்சங்கள் எதுவும் பெரிதாக கிடையாது.

 

கூமாபட்டியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள் ஏதும் கிடையாது என்றும், வீடியோக்களை நம்பி கூமாபட்டிக்கு செல்ல வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுநாள் வரை பெயர் கூட தெரியாத ஒரு கிராமம் திடீரென வைரலாகியுள்ளது கூமாபட்டியினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தல் போட்டி.. லாரி ஏற்றி அதிமுக பிரமுகரை கொலை செய்தாரா திமுக வேட்பாளர்? ஈபிஎஸ் கண்டனம்..!