Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Prasanth Karthick
வியாழன், 27 மார்ச் 2025 (09:07 IST)

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 10 மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் மழை சீசன் முடிந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவு வெப்பம் நிலவுகிறது. 

 

இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் என 10 மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் தேவையின்று வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments