Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதிக்கவாதிகளே இறுதியில் ஏமாறுவார்கள்- உதயநிதி டுவீட்

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (23:20 IST)
புதிய கல்விக் கொள்கை அந்தந்த மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீரி, மலையாளம்,கன்னடம், குஜராத்தி, அசாமி, பெங்காலி, கொங்கணி,மணிப்புரி, பஞ்சாபி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு வேண்டுமென்றே தமிழைப் புறக்கணித்துள்ளதோ எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புதிய கல்விக்கொள்கையை 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள ஒன்றிய அரசு, தமிழை மட்டும் திட்டமிட்டு புறக்கணித்துள்ளது. இந்தி-சமஸ்கிருத திணிப்பு, 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு, கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு என்ற சூழ்ச்சிகளும் - பிற்போக்குத்தனங்களுமே புதிய கல்வி கொள்கையாக வருகிறது. இதனால்தான் தி.மு.க உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களும், அறிவுசார் பெருமக்களும் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்தனர், எதிர்க்கின்றனர். புதிய கல்வி கொள்கையை தமிழில் வெளியிடாமல் மக்களை ஏமாற்றி, இதை கொல்லைப்புறம் வழியாக செயல்படுத்த நினைத்தால் ஆதிக்கவாதிகளே இறுதியில் ஏமாறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments