Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பூரில் நாய்க்கறி பிரியாணி: தெறித்து ஓடிய மக்கள்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (10:42 IST)
ஆம்பூரில் ஆட்டுக்கறியுடன்  நாய்க்கறியை சேர்த்து பிரியாணி தயாரித்து விற்ற வாலிபர்களை போலீஸார்  கைது செய்தனர்.
சமீபத்தில் சென்னை எழும்பூரில் கைப்பற்றப்பட்ட 2000 கிலோ நாய்க்கறியால் தமிழகமெங்கும் ஆட்டுக்கறி விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் ஓட்டல் கடைகளில் பிரியாணி விற்பனையும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மக்கள் கடைகளில் அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கே பயப்படுகின்றனர்.
 
இந்நிலையில் ஆம்பூரில் கடை ஒன்றில் மலிவு விலைக்கு மட்டன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். எனினும் அவர்கள் விற்பனை செய்யும் பிரியாணியில் சந்தேகித்த சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதையடுத்து போலீஸார் அந்த பிரியாணி கடைக்கு சென்று, பிரியாணி சமைக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அங்கு ஆட்டுக்கறியுடன் நாய்க்கறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த கடையை நடத்தி வந்த வாலிபர்களை கைது செய்தனர். இச்சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ரூ.11,000ஐ தாண்டியது..!

டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பண மோசடி செய்த கும்பல்.. டெல்லி சென்று கைது செய்த தமிழக காவல்துறை..!

புல்டோசரால் மசூதியை இடித்து தள்ளிய முஸ்லீம்கள்.. என்ன காரணம்?

ரெளடியின் வாடகை அறையில் பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்பு; கொலையா? அதிர்ச்சி சம்பவம்..

அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 7 பேர் பலி; ஊழியர்கள் தப்பி ஓடியதாக புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments