சென்னையில் வேகமாக பரவு மெட்ராஸ்-ஐ: மருத்துவர்கள் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (07:58 IST)
சென்னையில் மெட்ராஸ்-ஐ என்ற நோய் வேகமாக பரவி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸை  மெட்ராஸ்-ஐ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் மிக வேகமாக மெட்ராஸ்-ஐ பரவி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் மெட்ராஸ்-ஐ  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஐந்து நாட்களில் இது குணமடையும் என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மெட்ராஸ் ஐ நோய் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments