Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வேகமாக பரவு மெட்ராஸ்-ஐ: மருத்துவர்கள் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (07:58 IST)
சென்னையில் மெட்ராஸ்-ஐ என்ற நோய் வேகமாக பரவி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸை  மெட்ராஸ்-ஐ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் மிக வேகமாக மெட்ராஸ்-ஐ பரவி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் மெட்ராஸ்-ஐ  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஐந்து நாட்களில் இது குணமடையும் என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மெட்ராஸ் ஐ நோய் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments