Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் –சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (13:18 IST)
டாக்டர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் –சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளார் சுகன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் பிற்பகல்  12 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்றும் பிற  மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும், உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில்  மருத்துவர்கள் உரிய நேரத்தை கட்டாயமாகக் கடைப்பிடிப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments