Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள்களுக்கு சொத்தில் பங்கில்லையா ? கோபத்தில் கணவரை எரித்த மனைவி ..

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (15:55 IST)
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தில் வசித்துவந்தவர்  பாக்கியராஜ். இவரது மனைவி மரியலீலா. பாக்கியராஜ் 10 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் டெயிலராக வேலை பார்த்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊருக்கு வந்து தம் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்,  ஊருக்கு வந்தவுடன், தன்னிடமிருந்த பணத்தில், கொஞ்சம் எடுத்து தனது மகன், மகள்களுக்கு திருமணம் செய்துவைத்தார். அதன்பின்னர் பாக்கியராஜுக்கு உடல்நலம் சரியில்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்துவந்துள்ளார்.
 
இந்நிலையில், தனது இரண்டு மகன்களுக்கு மட்டும் சொத்துக்களை பிரித்துத்தர திட்டமிட்டு, நிலத்தை, அதிகாரியை வரச் சொல்லி அளந்துள்ளார். இதைப் பார்த்த மரியலீலா, தனது மகன்களுக்கு மட்டும் சொத்தா..? மகள்களுக்கு இல்லையா என கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர், பாக்கியராஜ் தூங்கும் பொழுது, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார் மரியலீலா.
 
தீப்பற்றி எரிந்த பாக்கியராஜ்ஜை அருகிலுள்ள மக்கள் மீட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து , வள்ளியூர் போலீஸார் வழக்குப் பதிவு மரியலீலாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments