Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமா போட்ட கண்டீஷன்... சம்மதிப்பாரா ஸ்டாலின்?

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (12:31 IST)
திமுக - விடுதலை சிறுத்தைகள் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.  

 
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை சில மணி நேரங்களாக நடந்த நிலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்று திருமாவளவன் பேட்டி அளித்தார். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. ஆனால் 3 பொதுத் தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் திமுகவை வற்புறுத்துகிறது என தெரிகிறது. இதனால் திமுக - விடுதலை சிறுத்தைகள் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 
விடுதலை சிறுத்தைகள் தனது கட்சியை சேர்ந்த 3 சமூக முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் வழங்குவதற்காக இந்த கோரிக்கையை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments