Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி இல்லாமல் திமுகவிற்கு வெற்றியா? அதிமுக எம்பி விமர்சனம்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (20:26 IST)
தமிழகத்தில் இரண்டு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ், திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததாலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி குறித்து அதிமுக எம்பி மைத்ரேயன் விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு, திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் ஏற்கெனவே அதிமுக வெற்றிபெற்ற தொகுதி என்பதால், அதில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை. ஆனால்,  கருணாநிதி இல்லாத திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியாது. திருப்பரங்குன்றத்தின் வெற்றி திருவாரூரிலும் எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments