Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு வழங்க தடையை எதிர்த்து அவசர வழக்கு: திமுக அதிரடி

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (11:20 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸினால் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸினால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1075 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று ஒருவர் மரணம் அடைந்த இடத்தை தமிழகத்தில் கொரோனாவா; இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது
 
இந்த நிலையில் தமிழக அரசு அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து நேற்று திடீரென ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் நேரடியாக உணவு வழங்க தடை விதித்துள்ளது. தன்னார்வலர்கள் உணவு வழங்க விரும்பினால் மாவட்ட நிர்வாகத்திடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் அனுமதி பெற்று அவர்களுடைய ஒத்துழைப்பில் உணவு வழங்கலாம் என அறிவித்துள்ளது 
 
இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது திமுக அதிரடியாக இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து உள்ளது 
 
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி வழக்கு தொடுக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கை தொடர சென்னை உயர் மன்ற பதிவாளர் அனுமதி அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments