Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜெயலலிதா இருந்தவரை இப்படி நடந்ததில்லை”..ஸ்டாலின் ஆதங்கம்

Arun Prasath
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (13:26 IST)
ஜெயலலிதா இருந்தவரை அவர் மத்திய அரசுக்கு அடி பணிந்து போனதில்லை என தற்போதைய அதிமுக ஆட்சியை குறித்து ஆதங்கம் பொங்க பேசியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின்  பிரச்சாரம் செய்தார்.

அதில், ஜெயலலிதா இருந்தவரை அடிபணிந்து போனதில்லை. ஆனால் தற்போது ஹிந்தி திணிப்பு, சமஸ்கிரத திணிப்பு போன்ற முயற்சிகள் நடைபெறுகிறது” என கூறினார்.

மேலும், சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை, தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை இவையெல்லாம் கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் எனவும் கூறினார். முன்னதாக பிரச்சாரம் செய்த போது, மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், திமுக ஆட்சிக்கு வந்தால் தான் விவசாயிகளும் பெண்களும் மேம்பாடு அடைய முடியும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments