திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக திமுக முகவர்களுக்கு ஆலோசனை!

J.Durai
சனி, 1 ஜூன் 2024 (18:01 IST)
கோவை நாடாளுமன்ற திமுக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்,  கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஸ்ரீ சாய் மஹாலில் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex Mla தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து, கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர்  என்.ஆர்.இளங்கோ, கழக தலைமை நிலைய செயலாளர் டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக,  முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
 
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 க்கு 40 வெற்றி பெறும் இதனைத்தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex Mla பேசுகையில்;- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். தமிழகம் புதுச்சேரியில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 க்கு, 40 இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றவர், வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஜூன் 3 ந்தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி  நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என கூறினார்.இதில், கோவை  வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளரும், தலைமை முகவருமான அன்புசெழியன் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், திமுக முகவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments