Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி நினைவஞ்சலி; ஆடம்பரமின்றி அஞ்சலி செலுத்திய திமுகவினர்!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:20 IST)
இன்று தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்படும் நிலையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி காலமாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுறுகின்றது. கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது கலங்கரைவிளக்கம் முதல் ஊர்வலமாக சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சில முக்கிய தலைவர்கள் மட்டுமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நினைவிடத்திற்கு சிறிது தொலைவிலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்றுள்ளார். அவருடன் துரைமுருகன், கனிமொழி எம்.பி. டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினரும் ஊர்வலமாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments